Thursday, 24 October 2013

சிம்மலக்னம்,,,,,,!!!

        சிம்ம லக்னத்தில் ஜென்மம் எடுத்த நீங்கள் அஞ்சா நெஞ்சமும் வீரமும் உங்களின் தனி முத்திரையாகும்.எத்தகைய கடுமையான எதிர்ப்பையும்
 பொருபடுத்தாமல்  துணிவுடன் செயல்படுவீர்கள்.வெற்றியில் மிகுந்த நம்பிக்கை உடையவர்.நீங்கள் மேலதிகாரிகளிடமிருந்து நல்ல பலன்கள்
எதிர்பாக்கலாம்.பித்தம், வாதம், முதலியன உண்டாகும். கரமான அசைவ உணவுகளில் நாட்டமுடையவர்.
 
      மற்றவர்களை நிலைகுலையாமல் கட்டுபடுத்தி, தைரியமூட்டுவதில்    சிறந்துவிளங்குவீர்கள்  புத்திர சந்தானங்களை குறிக்கும் ஐந்தாம்வீடு
தனுசு ராசியாக அமையப் பெற்றதால்  குழந்தைகளால் ஏற்படும் நற்பயன்கள் பொதுவாக குறைந்திருக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்தாலும்
முடிவில் பயனுற்றவர்களே  உங்களுக்கு எதிரிகளாவர்கள். நீரினாலும், கூரிய  ஆயுதங்களாலும் விபத்துக்கள் உண்டாக வாய்ப்புண்டு.
எச்சரிக்கை தேவை.
     நல்லவர்களின் ஆசியும், ஆதரவும் பெற்றுப்பீர்கள், விருந்தினரை    அன்புடன் வரவேற்று உபசரித்து மகிழ்வது உங்களுடைய மிகசிறந்த குணம்
பெண்களின் அன்பை பெறுவீர்கள். நல்ல  இல்வாழ்க்கை அமையும். மேலதிகாரிகளிடமிருந்து நல்ல மதிப்பையும் மரியாதையும் கிடைக்கும்
பணம் செலவு செய்வதில் கட்டுப்பாடு இல்லாதவர், நல்லவர்களால்  போற்றபடுவீர்கள்.

     உங்கள் லக்கனமானது அதனுடைய இடத்தின் 2 வது திரிகோணத்தில் அமைந்திருப்பதால், தங்களது ஆர்வமும்,திறமையும்,
இலக்கியமும் எழுதுதல்,பத்திரிகைத் தொழில், சங்கீதம், இவைகளின் மூலம் பணம் சம்பாதிக்க வாய்ப்புண்டு.50 வது வயதுக்குப்பின் இன்சூரன்ஸ்
அல்லது பணம்  முதலீடு ஆகியவற்றில் இருந்து தங்களுக்கு கொஞ்சம் செல்வம் கிடைக்கலாம்.தங்கள் வாழ்கையில் மிக முக்கியமான வருடங்கள்
23,26,31,36,45,53 மற்றும்54,56 வாய்ப்பை நழுவவிடாதீர்கள்.           

Wednesday, 9 October 2013

கடக லக்கணம்,,,,,,!!!

          கடக லக்கினத்தில் ஜென்மம் எடுத்த நீங்கள் வயதுக்கு மீறிய உடல்வாகு அமையபெற்றதால் பித்த சம்பந்தமான நோய்கள்உண்டாகும்.மற்றவர்களுக்குவேண்டியவற்றை,மனம்அறிந்துவழங்குவீர்கள்.திறமைமிக்கவராகவும்,
சுறுசுறுப்பாகவிளங்குவீர்கள்.அறிவாற்றலைவெளிபடுத்தும்
துறையில்வெற்றிபெறுவீர்கள்.நல்லவர்களைநாடிசென்று,அவருடன் உறவு கொள்ள விருப்பம் உண்டாகும்.ஆன்மீக ஞானிகளின்நல்லாசிகளையும்ஆதரவையும்பெறுவீர்கள்.சொந்தமுயற்சினால் பொருள் சம்பாதிப்பீர்கள் என்றாலும் பெரும்பான்மையான பொருள்களை பிறருக்கு கொடுத்து
உதவிசெய்து,தானும் பயன் பெறுவது கடக லக்னத்தில் பிறந்த உங்களுடைய தனி தன்மையாகும்.ஆயுதங்களை எப்போதும் தன்வசம் வைத்தும்
அதை கையாளும் பயிற்சியும் இருக்கும்.இயற்கைலேயே இனிய சுபாவமுடையவர் என்றாலும் இடையிடையே முன்கோபத்தினையும் காணலாம்
எராளமான நண்பர்களும் உண்டு.
    

    மகரராசி ஏழாம் வீடாக அமையபெற்றதால் உங்கள் வாழ்க்கைதுணைவர் கர்வம் உடையவராகவும்,இழிவான குணங்களுடயவரகவும்,
பேரசைகாரராகவும்கொடுமைப்படுத்துபவராகவும்  அமைய வாய்ப்புண்டு.
    எட்டாம் வீடு கும்பராசி ஆகையினால் தீயினால் விபத்து உண்டாக வாய்ப்புண்டு,முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.உடல் காயங்களை
அசட்டை  செய்யாமல் உடனடி சிகிச்சை செய்யவும்.உணவு முறையில் கட்டுப்பாடு அவசியம். பலரும் செய்ய நடுங்கும் காரியங்களை தைரியமாக
செய்வீர்கள் சங்கீதம்,கால்நடைகள் வளர்ப்பு போன்றவற்றில் வருமானம் பெருகும்.
  
     தங்கள் லக்கனமானது அதனுடைய இடத்தின் முதல் திரிகோணத்தில்அமைந்திருப்பதால் பணத்தை பொறுத்தவரை நீங்கள் கவனமாக
இருக்க வேண்டும்   மக்கள் உங்களை கஞ்சன் என்று கூறுவர்கள். செல்வம் சம்பாதிப்பதில் பெரும் சிரமங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு.சிலசமயங்களில்
தங்களுக்கு பெரும் பணநஷ்டங்கள் ஏற்படும் தனிப்பட்ட முறையால் வியாபாரத்தினால் தங்களுக்கு அதிக லாபம் கிடைக்கும்தங்கள் வாழ்கையில்
மிக முக்கியமான வருடம் 17, 24, 29, 31, 39, 49, 52, இந்த சந்தர்பத்தை நழுவவிடதீர்கள்.