Sunday, 28 July 2013
தாராள சிந்தையும், செல்வவளமும் பெற்ற"அவிட்டம்" நட்சத்திரகாரர்களே,,,,,!!!
வான்மண்டலத்தில்"அவிட்டம்" நட்சத்திரமானதுசனி கிரகத்தின்ஆதிக்கம்கொண்டநட்சத்திரமாகும்இந்த நட்சத்திரமானதுஇயற்கையாகவே" தாராளசிந்தையும், செல்வவளமும்பெற்ற நட்சத்திரமாகும்
இந்தநட்சத்திரத்தில்பிறந்தவர்கள்இசையில்ஆழ்ந்த விருப்பம்கொண்டிருப்பீர்கள். தாராளசிந்தையும், செல்வவளமும், நல்லதீரஉணர்வும்கொண்டவராகநீங்கள் விளங்குவர்கள். பிறர்உங்களைமதித்துமரியாதை, தருவார்கள்உங்கள்கணவன்/மனைவிஉங்களைமிகவும் விரும்பிநேசிப்பார். நீங்கள்தைரியமானவராகஇருப்பார்கள் உங்கள்சகோதரர்கள்மற்றும்உறவினர்களை, நீங்கள்மிகவும் விரும்பிஅன்புகாட்டுவீர்கள். பிரமனுக்குஅவிட்டம் நட்சத்திரதினத்தில்ஞானம்கிடைத்தது.
Monday, 15 July 2013
"அதீதமான, நல்லசக்திவாய்ந்த "திருவோணம்" நட்சத்திரகாரர்களே,,,,,!!!
வான்மண்டலத்தில் "திருவோணம்" நட்சத்திரமானது சனி கிரகத்தின் ஆதிக்கம் கொண்ட நட்சத்திரமாகும் இந்த நட்சத்திரமானது இயற்கையாகவே "அதீதமான, நல்ல சக்திவாய்ந்த" உள்ளுணர்வு பெற்ற நட்சத்திரமாகும்
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் , நல்ல சுபிட்சத்தோடும், படித்தவராகவும், புத்திசாலியாகவும் விளங்குவார்கள். இசை, ஜோதிடம், கணிதம் - ஆகியவற்றில் உங்கள் மிகுந்த ஆர்வம் இருக்கும். உங்கள், அதீதமான, நல்ல சக்திவாய்ந்த உள்ளுணர்வு ஒன்று இருக்கும். இவர்களுக்கு கவர்ச்சிமிக்க, தாராள மனம் படைத்த மனைவி/கணவன் கிடைப்பார்கள் பிறருக்கு உதவி செய்யும் எண்ணமும் செல்வாக்கும் நிறைந்திருக்கும் சந்திர பகவான்ஒரு சாபத்தினால் இருளடைந்து இருந்தார் அவரது மனைவியரில் ஒருவரான திருவோண நட்சத்திர தேவி சாபவிமோசனம் பெற்றுத்தந்தார்.
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வேலூர் மாவட்டம் திருபாற்க்கடல் இவ்வூர் வேலூர் t o சென்னை செல்லும் வழியில் வேலுரிளிருந்து 2௦ கிலோமீட்டர்தூரத்தில் காவேரிபாக்கம் அதிலிருந்து 2 கிலோமீட்டர் தூரத்தில் திருபாற்க்கடல் பிரசன்னா வெங்கடேச பெருமாள் உள்ளது.
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ,தங்கள் நட்சத்திர தினத்தன்றோ அல்லது மூணாம்பிறை அன்றோ இத்தல பெருமாளுக்கு அபிசேக ஆரதனை செய்துவழிபட்டால் நினைத்தது நடக்கும் மாணவர்களுக்கு கல்வி செல்வமும் செழித்து ஓங்கும்.
Sunday, 7 July 2013
மிகுந்ததந்திரபுத்தியுடைய ""உத்திராடம்" "நட்சத்திரகாரர்களே,,,,,,,!!!
வான்மண்டலத்தில் உத்திராடம் நட்சத்திரம் வியாழன் மற்றும் சனி ஆகிய கிரகத்தின் ஆதிக்கம் பெற்ற கோளாகும் இந்த நட்சத்திரமானது மிகுந்த தந்திரம் கொண்ட நட்சத்திரமாகும்.
இந்த நட்சத்திரத்தில் பிறந்திருதால், கடமைப்பற்றுடன் கீழ்ப்படிந்தும், நல்ல குணம் படைத்தவராகவும், பல நண்பர்களைக் கொண்டவராகவும் நன்றியுடையவராகவும், அன்புள்ளம் நிறைந்தவராகவும் இருப்பதுடன், உங்களுக்கு கிடைத்த உதவிக்கு நன்றிக் கடனும் , மிகுந்த தந்திர புத்தியுடைய சாமர்த்தியசாலியாகவும், முயற்சியில் வெற்றி காண்பவராகவும் விளங்குவார்கள். இவர்களுக்கு பல செல்வந்தர்களைத் தெரிந்திருக்கும் இவர்கள் முதலாளிகள் மதித்து மதிப்புக் கொடுப்பார்கள். இசையிலும் நடனத்திலும் இவர்களுக்கு அபார ஆசை இருக்கும்.
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவகங்கை மாவட்டம் ஒக்கூர் அருகிலுள்ள பூங்குடி இவ்வூர் சிவகங்கையில் இருந்து காரைக்குடி செல்லும் வழியில் 12 கிலோமீட்டர்தூரத்தில் ஒக்கூர்அதிலிருந்து 3 கிலோமீட்டர் தூரத்தில் கீழப்பூங்குடி உள்ளது. இங்குதான் சிவன் பிரம்ம புரீஸ்வரராக எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் நட்சத்திர தினத்தில் மற்றும் பவுர்ணமி சித்திரை பிறப்பன்றும் சிறப்பு பூஜை நடைபெறும்.திருமண தடை உள்ளவர்கள்,இங்குள்ள மீனாட்சிஅம்மனை வணங்கிவழிபட்டு வந்தால் திருமண தடை நீங்கி வாழ்வில் வளம் பெறலாம்.
Subscribe to:
Posts (Atom)


