Friday, 28 June 2013

கடுமையானபோக்குகொண்ட"பூராடம்'" நட்சத்திரகாரர்களே,,,,,!!!

வான்மண்டலத்தில் 'பூராடம்" நட்சத்திரமானது கடுமையான போக்கு கொண்ட நட்சத்திரமாகும் இந்த நட்சத்திரம் வியாழன் கிரகத்தின் ஆதிக்கமும் குணமும் கொண்ட நட்சத்திரமாகும்.

       இந்த நட்சத்திரத்தில்பிறந்தவர்கள் சுகபோகவாழ்கை நடத்துவார் எப்போதும் உறவினர்கள் மத்தியில் செல்வாக்கோடு வாழ்வார் பிடிவாதகுணம் கடுமையாக பேசும் சுபாவம் இவர்களிடம் உண்டு வாக்குவாதங்களில் அடிக்கடி ஈடுபடுவர்கள் அனைத்து தேவதைகள் வாஸ்துபகவான்களும் இவர்களது நட்சத்திர தலத்தில் வழிபாடு செய்வதாக ஐதீகம் 

 இச்சிசறப்பு பெற்ற திருச்தலம் தஞ்சாவூர்மாவட்டம் திருவையாறு அருகிலுள்ள'கடுவெளி" இந்த ஊர் திருவையாறுரிலிருந்து கல்லனை செல்லும் வழியில் நான்குகிலோமீட்டர் தூரத்தில் இந்த ஊரை அடையலாம் இந்தஊரில்தான் சிவன் "ஆகாசபுரீஸ்வரராக'அருள்பாலிக்கிறார் 

          இந்த நட்சத்திரத்தில்பிறந்தவர்கள் இந்த ஸ்தல இறைவனை புனுகு ,ஜவ்வாது ,சாத்தி கேசரி நைவேத்தியம் செய்து வணங்கி தங்கள் நட்சத்திர நாளில் சாமி சன்னதியில் சாம்ராணிபுகையிட்டு வழிபாடு செய்யலாம் இது கடுவெளி சித்தரின் அவதார ஸ்தலம் இது. 

Tuesday, 25 June 2013

"ஆஞ்சநேயருக்கு" நிகரானபலம்பெற்ற "மூலம்"நட்சத்திரகாரர்களே,,,,,,!!!

 வான்மண்டலத்தில்மூலம்நட்சத்திரமானது வியாழன் கிரகத்தின் ஆதிக்கம் பெற்ற நட்சத்திரம் இந்த மூலம்நட்சத்திரமானது மிகவும் சுறுசுறுப்பாக செயல்படும் ஒரு நட்சத்திரமாகும்.

        மூலம்நட்சத்திரத்தில்பிறந்தவர்கள் சோம்பல் என்பதே இல்லாமல் சுறுசுறுப்பாக துறுதுறு என்று இருப்பார்கள் கல்வியில்ஞானமும் உடல் அழகும் பார்பதற்கு லட்சனமும் பொருந்தியவராக இருக்கும் இவர்கள் உணவு விசியத்தில் அக்கறையும்கொண்டவர்களாக இருப்பார்கள்பழங்களையும்புசிப்பார் உடல் வலிமை பெற்று இருப்பார்கள் இதற்குகாரணம் ஆஞ்சநேயர் மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர் கலைமகளாகிய அந்த சரஸ்வதிக்குரிய நட்சத்திரமும் மூலமே.

    இச்சிறப்புபெற்ற ஸ்தலம் தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு (இந்த ஊர் சென்னை இலிருந்து தக்கோலம் செல்லும் வழியில் சுமார் நாற்பத்தி ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது) இங்கு சிவன் லிங்கமாய் "சிங்கீஸ்வரராக" அருள்பாலிக்கிறார்

      

          மூலம்நட்சத்திரத்தில்பிறந்தவர்கள்  தங்கள் நட்சத்திர நாளில் இத்தலத்தில் பிராத்தனை செய்தால் இசைத்துறையில் பிரகாசிக்கலாம் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்  எலும்புகள் நோய்களும் குணமாகும் 

                

Friday, 21 June 2013

துணிச்சல்மிகுந்த"கேட்டை" நட்சத்திரகாரர்களே,,,,,,!!!

  வான்மண்டலத்தில்கேட்டைநட்சத்திரமானதுசெவ்வாய் கிரகத்தின்ஆதிக்கம்பெற்றகோளாகும்'"கேட்டையில்பிறந்தவர்கள்கோட்டைகட்டிஆளலாம்"என்றபழமொழிக்குஏற்ப கேட்டைநட்சத்திரமானதுதுணிச்சல்குணம்நிறைந்தநட்சத்திரமாகும்.

    கேட்டைநட்சத்திரத்தில்பிறந்தவர்கள்கல்வியில்தேர்ச்சி  கொண்டவராகவும்தைரியமும்துணிச்சலும் இயல்பாகவேஇருக்கும்அழகாகவும்சுருக்கமாகவும்பேசும் திறன்படைத்தவர்எந்தகரியத்தையும்நடத்திகட்டும் சாமர்த்தியமும்கோபம்அதிகமும்அடுத்தவரிடத்தில்பண்பும் நிறைந்துகாணப்படுவார்கள். பெரியநம்பிகள்மார்கழிமாதம் கேட்டைநட்சத்திரத்தில்அவதரித்தார்இவருக்குமாதங்களில் கேட்டைநட்சத்திரதினத்தன்றுபூஜைஉண்டு 

         இச்சிறப்புபெற்றஸ்தலம்தமிழகத்திலுள்ள தஞ்சாவூர்மாவட்டம்பசுபதிகோவில்(தஞ்சாவூர்லிருந்து கும்பகோணம்செல்லும்வழியில்சுமார் 13  கிலோமீட்டர்தூரத்தில்)"வரதராஜப்பெருமாள்"அருள் பாலிக்கிறார்.  

          கேட்டைநட்சத்திரத்தில்பிறந்தவர்கள்நட்சத்திரதினம் மற்றும்செவ்வாய்க்கிழமைநாட்களில்கேட்டை நட்சத்திரத்தில்பிறந்தவர்கள்ஜாதகம்தோஷம்நீங்க  வேண்டிகொள்ளலாம். மருதாணி,கரிசலாங்கண்ணி செம்பருத்திஇலைகளில்ஆனாதீபமேற்றிவழிபடுவதுசிறப்பு. 

Monday, 17 June 2013

மேன்மையானபதவிகளைஅடையும் '"அனுஷம்" நட்சத்திரகாரர்களே,,,,,!!!

                                   

  வான்மண்டலத்தில்அனுஷம்நட்சத்திரமானதுசெவ்வாய் கிரகத்தின்ஆதிக்கம்பெற்றகோளாகும்அனுஷம் நட்சத்திரமானதுஇயற்கைலேயேமேன்மைகுணம்நிறைந்த நட்சத்திரமாகும்.

         அனுஷம்நட்சத்திரத்தில்பிறந்தவர்கள்உற்றார் உறவினர்களிடம்அன்புகொண்டவராகவும்எப்போதும் செல்வாக்குடன்மேன்மையானஅரசாங்கபதவிகளை வகிப்பார்கள்.பாராட்டும்பரிசும்கிடைக்கும்மற்றவர்களை சுத்ரித்துநடந்துகொள்வர்ஊர்சுற்றுவதில்விருப்பம் கொண்டிருப்பார்கள்வெளிப்படையாகபேசும் மனம் இல்லாதிருப்பார்கள் 

         

  இச்சிறப்புபெற்றஸ்தலம்தமிழகத்திலுள்ள நாகப்பட்டினம்மாவட்டம்திருநின்றியூர்இவ்வூரில்தான்சிவன்  (மயிலாடுதுறைலிருந்துசீர்காழிசெல்லும்வழியில்சுமார்7 கிலோமீட்டர்தூரத்தில்)"மகாலட்சுமிபுரீஸ்வரரக"அருள் பாலிக்கிறார்.  

                              

                                                

  அனுஷம்நட்சத்திரத்திலபிறந்தவர்கள்தங்கள்நட்சத்திர தினம்மற்றும்செவ்வாய்க்கிழமைநாட்களில்மற்றும்அனுஷம் நட்சத்திரத்தில்பிறந்தவர்கள்ஆண்கள்என்றால்துவாதசி திதியும் பெண்களானால்வரலக்ஷ்மிநோம்புஅன்றுஇத்தல "மகாலட்சுமிபுரீஸ்வரருக்குசந்தனகாப்பிட்டுமாதுளை முத்துக்களைஅதில்பதித்து வழிபட்டுடால்நோய்நொடி இல்லாதவாழ்வையும்செல்வசெழிப்பு ஏற்படும்,அம்மாவாசைதினங்களில்முன்னோர்கள்ஆத்மா சாந்தியடையவேண்டிகொள்ளலாம்.

Friday, 14 June 2013

சாமர்த்தியம்...பெற்ற"விசாகம்" நட்சத்திரகாரர்களே.....!!!

            வான்மண்டலத்தில் விசாகம் நட்சத்திரமானது வெள்ளி மற்றும் செவ்வாய் கிரகத்தின் ஆதிக்கம்பெற்ற கோளாகும் விசாகம்நட்சத்திரமானது இயற்கைலேயே சாமர்த்தியம் பெற்ற நட்சத்திரமாகும்.
       

            விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சமய பற்றும் தெய்வபக்தி கொண்டவராகவும் பொறாமையும் நட்பில்ல பகைமைஉணர்சியும்
காணப்படுவார்கள் வியாபாரத்தில் ஈடுபாடு நடக்கததையும் நடத்திக்காட்டும் சாமர்த்தியமும் கலைகளில் ஆர்வமும் தன்னைபற்றி தானே புகழ்ந்து கொள்ளும் தன்மையும் தான தர்மம் காரியங்களில் தாராளமனமும்  இவர்களிடம் நிறைந்திருக்கும்
         

                  இச்சிறப்பு பெற்ற ஸ்தலம் தமிழகத்திலுள்ள திருநெல்வேலிமாவட்டம் பண்பொழி(செங்கோட்டைலிருந்து சுமார் 7 கிலோமீட்டர்தூரத்தில்)திருமலைகோவில் அமைந்துள்ளது 

                  விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் நட்சத்திர தினம் மற்றும் செவ்வாய்க்கிழமை வெள்ளிக்கிழமை நாட்களில் மலையேறி இத்தல முருகனை வழிபட்டு அபிசேக ஆராதனை செய்தால் வாழ்வு திருப்புமுனையாகஅமையும் என்பது சித்தர்களின் வாக்கு.

Tuesday, 11 June 2013

புத்தி கூர்மை பெற்ற "சுவாதி" நட்சத்திரகாரர்களே,,,,,

                           
வான்மண்டலத்தில் 'சுவாதி ' நட்சத்திரம்  வெள்ளி கிரகத்தின் ஆதிக்கம்  பெற்ற நட்சத்திரமாகும் இந்த நட்சத்திரமானது இயற்கைலேயே மிகுந்த புத்தி கூர்மை பெற்ற நட்சத்திரமாகும்.
     
                  இந்த 'சுவாதி'  நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்  இதற்குகாரணம் இந்நட்சத்திரதலத்தில்  நல்ல அழகிய தோற்றத்துடனும், மகிழ்ச்சியான சுபாவத்துடனும், சமயப்பற்று இருக்கும் தர்ம காரியங்களுக்காக நன்கொடை அளிப்பார்கள். நீங்கள், உங்கள் உணர்ச்சிவெறிகளை கட்டுப்படுத்தி வைத்திடும் ஆற்றல் பெறுவார்கள் ஆனால் விரகதாபத்தைப் (உணர்ச்சி வேட்கையை) பொறுத்துக்கொள்ள, இயலாது. வியாபாரத்தில் தேர்ச்சி பெற்றவராக விளங்குவதுடன், நண்பர்கள் மற்றும் உறவினர்களுடனும் நல்லுறவுகளைப் பராமரிப்பார்கள்.  

         
                       இவ்வளவு சிறப்புபெற்றஸ்தலம் தமிழகத்தின் சென்னை பூந்தமல்லி அருகிலுள்ள சித்துகாடு(இது தண்டுதரை என்ற ஊருக்கு செல்லும் வழியில் சுமார் எட்டு கிலோமீட்டர்தூரத்தில்)  எனும் ஊர் உள்ளது. இவ்வூரில்தான் 'தாத்திரீஸ்வரர்"அருள் பாலிக்கிறார்.
    
                          சுவாதி  நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் நட்சத்திர நாட்களில் , இத்தலத்தில் உள்ள"இறைவனையும் இத்தலத்தில் உள்ள குபேரனுக்கு நெல்லிக்காய்ஊறுகாயுடன்தயிர்சாதம் புளியோதரையும் படைத்து அதை அங்குள்ள ஏழை எளியவற்கு தானம்செய்தால் வாழ்வில் செல்வவளம் பெருகும் என்பது ஐதீகம்  வணங்கி வலம்வந்தால் திருமணதடைநீங்கும்,இருதய நோயாளிகள் நெய் தீபமேற்றிவழிபட்டால் நல்ல வழிகாட்டுதலுடன் குணமாகும்,என்பது ஐதீகம். .    

Monday, 10 June 2013

அறிவாற்றல்,,,,,! பெற்ற 'சித்திரை" நட்சத்திரகாரர்களே,,,,,!!!

          
             வான்மண்டலத்தில் சித்திரை  நட்சத்திரம் புதன் கிரகத்தின் ஆதிக்கம்மற்றும் வெள்ளி கிரகத்தின் ஆதிக்கமும்  பெற்ற நட்சத்திரமாகும் இந்த நட்சத்திரமானது இயற்கைலேயே மிகுந்த அறிவாற்றல்  பெற்ற நட்சத்திரமாகும்.
     இந்த சித்திரை  நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அறிவாற்றல்மிகுந்தவராகவும்வைத்தியம் ,ஜோதிடத்தில் நல்ல ஆர்வமும் சமய பற்றும் ,கொண்டவராகவும் தெய்வபக்தியும் உழைப்பின் மேல் மதிப்பும் மரியாதையும் கொண்டிருப்பார், ஆடை ஆபரணங்களில் பிரியமும்,கல்வியில் ஆர்வமும் ,   கட்டுமான தொழிலில் நுணுக்கமும் கொண்டிருப்பார்இதற்குகாரணம்
                         
          இந்நட்சத்திரதலத்தி ல் குரு பகவான் பிரகல்பதிக்குசித்திரை மாதம்சித்திரைத்தன்று சித்திரை தேரில் எழுந்தருளி காட்சிதந்தார்.
         
       இவ்வளவு சிறப்புபெற்றஸ்தலம் தமிழகத்தின் மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகிலுள்ள குருவித்துறை  எனும் ஊர் உள்ளது. இவ்வூரில்தான் 'சித்திர ரத வல்லபபெருமாளாக"அருள் பாலிக்கிறார்.
      
                                     சித்திரை  நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் நட்சத்திர நாட்களில்,மற்றும் வியாழகிழமை,பவுர்ணமியன்று, இத்தலத்தில்      உள்ள"இறைவனையும்,வணங்கி வலம்வந்தால் திருமணதடைநீங்கும்,குழந்தைபாக்கியம்கிடைக்கும் நாம் முற்பிறவியில் செய்த பாவங்கள் நீங்கி வாழ்வில் வளம்பெறுவோமாக.   

Thursday, 6 June 2013

'"விவேக'" மிகுந்த,,,"ஹஸ்தம்",,,நட்சத்திகாரர்களே,,!!!

        வான்மண்டலத்தில் 'ஹஸ்தம்' நட்சத்திரம் புதன் கிரகத்தின் ஆதிக்கம் பெற்ற நட்சத்திரமாகும் இந்த நட்சத்திரமானது இயற்கைலேயே மிகுந்த வல்லமை பெற்ற நட்சத்திர வளிமண்டலமாகும்.

    இந்த ஹஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் விவேக மிகுந்தவராகவும்,எப்போதும் எதிலும் தாரளமனம்கொண்டவராகவும் பலரால் விரும்பி நேசிக்கபடுபவர்கள்,துறவிகளிடம் மதிப்பும் மரியாதையும் கொண்டிருப்பார், ஆடை ஆபரணங்களில் பிரியமும்,கல்வியில் ஆர்வமும் கலைகளில் ரசிப்புத்தன்மையும் வாயடிதனமாகவும்,    தயார்மீது அலாதிபிரியமும் கொண்டிருப்பார் இதற்குகாரணம் இந்நட்சத்திரதலத்தில் சித்தர்களும்,முனிவர்களும்,மகான்களும் அரூபா வடிவில் இத்தல இறைவனை வழிபடுவதாக ஐதீகம்.

         இவ்வளவு சிறப்புபெற்றஸ்தலம் தமிழகத்தின் நாகபட்டினம்மாவட்டம் கும்பகோணம்t o மயிலாடுதுறைசெல்லும் வழியில் குத்தாலம் பிரிவிலிருந்து சுமார் எட்டு கிலோமீட்டர்தூரத்தில் கோமல் எனும் ஊர் உள்ளது. இவ்வூரில்தான் சிவன் "கிருபா கூபரேஸ்வரர்" (எத்தகைய தவறுக்கும் மன்னிப்பு தரக்கூடியவர்) ராக அருள் பாலிக்கிறார்.

     ஹஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் நட்சத்திர நாட்களில்,மற்றும் திங்கள்கிழமை,புதன்கிழமை,நாட்களில் இத்தலத்தில் உள்ள 'கிருபாகூபரேஸ்வரர்"இறைவனையும் அன்னபூரணியும் வணங்கி வலம்வந்தால் திருமணதடைநீங்கும், ,குழந்தை பாக்கியம் கிடைக்கும்நாம் முற்பிறவியில் செய்த பாவங்கள் நீங்கி வாழ்வில் வளம்பெறுவோமாக.