Thursday, 24 October 2013

சிம்மலக்னம்,,,,,,!!!

        சிம்ம லக்னத்தில் ஜென்மம் எடுத்த நீங்கள் அஞ்சா நெஞ்சமும் வீரமும் உங்களின் தனி முத்திரையாகும்.எத்தகைய கடுமையான எதிர்ப்பையும்
 பொருபடுத்தாமல்  துணிவுடன் செயல்படுவீர்கள்.வெற்றியில் மிகுந்த நம்பிக்கை உடையவர்.நீங்கள் மேலதிகாரிகளிடமிருந்து நல்ல பலன்கள்
எதிர்பாக்கலாம்.பித்தம், வாதம், முதலியன உண்டாகும். கரமான அசைவ உணவுகளில் நாட்டமுடையவர்.
 
      மற்றவர்களை நிலைகுலையாமல் கட்டுபடுத்தி, தைரியமூட்டுவதில்    சிறந்துவிளங்குவீர்கள்  புத்திர சந்தானங்களை குறிக்கும் ஐந்தாம்வீடு
தனுசு ராசியாக அமையப் பெற்றதால்  குழந்தைகளால் ஏற்படும் நற்பயன்கள் பொதுவாக குறைந்திருக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்தாலும்
முடிவில் பயனுற்றவர்களே  உங்களுக்கு எதிரிகளாவர்கள். நீரினாலும், கூரிய  ஆயுதங்களாலும் விபத்துக்கள் உண்டாக வாய்ப்புண்டு.
எச்சரிக்கை தேவை.
     நல்லவர்களின் ஆசியும், ஆதரவும் பெற்றுப்பீர்கள், விருந்தினரை    அன்புடன் வரவேற்று உபசரித்து மகிழ்வது உங்களுடைய மிகசிறந்த குணம்
பெண்களின் அன்பை பெறுவீர்கள். நல்ல  இல்வாழ்க்கை அமையும். மேலதிகாரிகளிடமிருந்து நல்ல மதிப்பையும் மரியாதையும் கிடைக்கும்
பணம் செலவு செய்வதில் கட்டுப்பாடு இல்லாதவர், நல்லவர்களால்  போற்றபடுவீர்கள்.

     உங்கள் லக்கனமானது அதனுடைய இடத்தின் 2 வது திரிகோணத்தில் அமைந்திருப்பதால், தங்களது ஆர்வமும்,திறமையும்,
இலக்கியமும் எழுதுதல்,பத்திரிகைத் தொழில், சங்கீதம், இவைகளின் மூலம் பணம் சம்பாதிக்க வாய்ப்புண்டு.50 வது வயதுக்குப்பின் இன்சூரன்ஸ்
அல்லது பணம்  முதலீடு ஆகியவற்றில் இருந்து தங்களுக்கு கொஞ்சம் செல்வம் கிடைக்கலாம்.தங்கள் வாழ்கையில் மிக முக்கியமான வருடங்கள்
23,26,31,36,45,53 மற்றும்54,56 வாய்ப்பை நழுவவிடாதீர்கள்.           

No comments:

Post a Comment