Friday, 8 November 2013

கன்னி லக்னம்,,,,,,,,!!!

   கன்னி லக்கனத்தில் ஜென்மம் எடுத்த நீங்கள் இனிமையான தோற்ற போலியுடன், ஆடை அலங்காரத்தாலும் காண்போரை கவர்வீர்கள். பெண் குழந்தை 

அதிகம்  பெறும் வாய்ப்புண்டு. பெண் சிநேகிதர்கள் அதிகம் ஏற்படும். கல் நெஞ்சக்காரராகவும், கபடராகவும் காணப்படுவீர்கள். வெட்டுகாயங்கள் 

உடல் புண் உண்டாகாமல்  இருக்கவும். சிறந்த நல்லோளுக்கத்தோடு செல்வம் சம்பாதிப்பீர்கள் நில புலன்கள் மூலமும் விவசாயம், 

தோட்டக்கலை, மூலமும் செல்வம் உண்டாகும், போர்வீரராகவும்,  பட்டாளம், போர்கருவி சம்பந்தமான தொழிலிலும் ஈடுபடவாய்ப்புண்டு, கால்நடை 

பிராணிகள் வளர்ப்பதில் ப்ரியமுள்ளவராக இருப்பீர்கள். தன் வாழ்க்கை முன்னேற்றத்திற்கான பாதையை தானே வகுத்துக்கொண்டு கட்டுப்பாட்டுடன் 

முன்னேறவும் நுரையீரல் சுவாசக்குழல் முதலிய அவயங்களில் நோய்களும் பித்த சரீரமும் உள்ளவர்.

 

     ஆண் குழந்தைகளின் நன்னடத்தையில் கவனமும்,அன்பும் மேற்பார்வையும் பயனளிக்கும்,வாழ்க்கைத்துணைவர் உடல் உறவில் அதிக ஆர்வம் 

காட்டுபராகவும், குழந்தைகளின் அழகில் லயித்தவராகவும்,  தற்புகழ்ச்சி உடையவராகவும் அமைவர்.கல்வியில் கருத்தும்,பயிற்சியில் பற்றுதலும் 

கொண்டு நல்ல மாணவனாகவும், ஆசிரியராகவும் இருப்பீர்கள்,புகழையும்,மக்கள் ஆதரவும்பெருவீர்கள், இனிமையான சுபாவமும் வாழ்க்கை முறையும் 

பிறருக்கு எடுத்துகாட்டாக  விளங்கும்.பொதுமக்களுக்கு நன்மை பயக்கும் பல சமூகசேவைகளை செய்வீர்கள் 

 

    தங்கள் லக்னமானது அதுனுடைய இடத்தின் முதல் திரிகோணத்தில் அமைந்துள்ளதால், கடின உழைப்பினால் தாங்கள்  செல்வத்தை 

சம்பாதிப்பீர்கள்.வாழ்கையின் முற்பகுதியில் நஷ்டங்கள் ஏற்பட வாய்ப்புண்டு யூகத்தின் அடிப்படையில் செய்யும் காரியங்களினால் உண்டாகும்

சிக்கல்களை தவிர்த்து விடுங்கள்.தங்கள் சுயநலத்திற்காகவே வேலை செய்யும் சுயநலவாதிகளின் தாக்கம் ஏற்ப்பட வாய்ப்புகள் உள்ளன.

கவலையீனமான  திட்டங்கள்,நடவடிக்கைகளின் செயல்களில் இருந்து விலகி இருங்கள் தாங்கள் புத்திசாலிதனமான முதலிடுகள்,சுகாதாரம் 

சம்பந்தமான பொருள்கள்,வாசனை திரவியங்கள்,சங்கீதம் ஆகியவை சம்பந்தமான வியாபாரங்கள் மூலமும் பணம் சம்பாதிக்கமுடியும். 

ஒரு சில சந்தர்பங்களில்  தாங்கள் வழக்குகள் சம்பந்தமான விவகாரங்களில் சிக்கிக்கொள்ள நேரிடலாம்.தங்களின் வாழ்க்கையின் 

முக்கியமான வருடம்18, 24, 30, 36, 42, 49, 55,    இந்த சந்தர்பத்தை நழுவவிடதீர்கள்......வாழ்க வளமுடன்             

      

No comments:

Post a Comment