Tuesday, 28 May 2013
கருணைஉள்ளம்கொண்ட"உத்திரம்' நட்சத்திரகாரர்களே,,,,,,!!!
வான்மண்டலத்தில்நாம் பார்க்க இருப்பது உத்திரம் நட்சத்திரம் இந்த நட்சத்திரமானதுசூரியன் மற்றும் புதன் கிரகத்தின் ஆதிக்கம் கொண்டு செயல்படும் நட்சத்திரமாகும் இந்த நட்சத்திரமானது இயற்கையிலேயே நன்னடத்தை கொண்டநட்சத்திரவளிமண்டலமாகும்.
இவ்வளவு சிறப்புபெற்ற இந்த ஸ்தலம் தமிழகத்திலுள்ள தஞ்சாவூர்மாவட்டம் லால்குடி அருகிலுள்ள இடையாற்றுமங்களம் என்ற ஊரில்"மாங்கல்யேஸ்வரர்" ஆலயம் அமைந்துள்ளது. திருச்சி லால்குடிலிருந்து 5 கி /மி தூரத்தில் இடையாற்றுமங்களம் உள்ளது..இக்கோவில் செல்ல பஸ் வசதி உள்ளது.
உத்திர நட்சத்திரகாரர்கள் திருமண தடைகள் உள்ளவர்கள் தங்கள் நட்சத்திர தினத்தில் சென்று வழிபட்டால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்.மேலும் முப்பிறவியில் செய்த கர்மவினைகள் நீங்கி வாழ்வில் வளம்பெறலாம்.
Friday, 17 May 2013
ஒழுக்கம்,தைரியம், மனம் கொண்ட 'பூரம்" நட்சத்திரகாரர்களே,,,,,,!!!
வான்மண்டலத்தில் 'பூரம்' சூரிய கிரகத்தின் ஆதிக்கம் பெற்ற கோள்களாகும். இந்த கோள்களானதுநல்ல தன்மைகுணம் கொண்ட நட்சத்திரகோளாகும்.
பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதையும் ஒழுக்கம்,தைரியம் மனம் கொண்டவர்களாக இருப்பார்கள், தான தர்மம்,காரியங்களில் முழுமையான ஈடுபாடுகொண்டு இருப்பார்கள்,எப்போதும் நீதி நேர்மையுடன் திகழ்பவர் விவசாயத்தில் நாட்டமும் நிறைந்திருக்கும் ஏன்எனில் இந்த நட்சத்திர தலத்தில் சிவதீர்த்தம்,நாகதீர்த்தம்,ஞான பிரம்மா தீர்த்தம்,இந்திர தீர்த்தம்,ஸ்ரீ தீர்த்தம்,ஸ்கந்ததீர்த்தம்,குரு தீர்த்தம், எனும் ஏழுதீர்த்தம் இருப்பதால் இந்த நட்சத்திர தலத்தின்சிறப்பு.
இவ்வளவு சிறப்புபெற்றஸ்தலம் தமிழகத்திலுள்ள புதுக்கோட்டைத to பட்டுகோட்டைசெல்லும் வழியில்[ 7 கிலோமீட்டர்தூரத்தில் அமைந்துள்ளது] .ஸ்ரீ ஹரிதீதேஸ்வரர் " ஆலயம்.ஆகும்
இந்த நட்சத்திரதலத்தில் பூராநட்சத்திர நாளன்று இத்தலத்தில் அபிசேக ஆராதனைசெய்து வழிபட்டு வந்தால் குழந்தைபாக்கியம் இல்லாதவர்கள்குழந்தைபேறு பெறலாம் இதற்கு ஆடிபூரம்உகந்த நாளாக கருதபடுகிறதுமேலும் முப்பிறவியில் செய்த கர்மவினைகள்நீங்கி வாழ்வில் வளம் பெறுவோமாக,,,,,,
Thursday, 16 May 2013
"ஜெகத்தினை"ஆளபிறந்த,,,,"மகம்" நட்சத்திரகாரர்களே,,,,,!!!
வான்மண்டலத்தில்'மகம்"'நட்சத்திரமானதுசூரிய கிரகத்தின் ஆதிக்கம்பெற்றகோள்களாகும். இந்த கோள்களானதுஎதிலும்சாமர்த்தியமும்,சாதுர்த்தியமும் கொண்டநட்சத்திரகோளாகும்
மகம்நட்சத்திரத்தில்பிறந்தவர்கள்எதையும்ஆராய்ந்து செய்யும்மனம்கொண்டவர்களாகஇருப்பார்கள், தான தர்மம்,காரியங்களில்முழுமையானஈடுபாடுகொண்டு இருப்பார்கள்,எப்போதும் நீதி நேர்மைஎன்றுதனக்குள்ஒரு வரைமுறைகள்அதற்குதக்கவாறுவாழும்கௌரமான மனிதனாகதிகழ்பவர்பேச்சுக்களில்சாதுர்த்தியமும் தன்நம்பிக்கையும்நிறைந்திருக்கும்ஏன்எனில்இந்தநட்சத்திர தலத்தில்பரத்வாஜ்எனும்மகான்மகம் நட்சத்திரத்தில்பிறந்தவர்என்பதால்இந்தநட்சத்திரதலத்தில் மாதந்தோறும்சிறப்புபூஜைகள்நடைபெறுகிறதுஇந்த பூஜையைவழிபடபலமகரிஷிகள்பலமகான்கள்அருபவடிவில் வந்துகலந்துகொள்வதாகஐதீகம்.
இவ்வளவுசிறப்புபெற்றஸ்தலம்தமிழகத்திலுள்ள திண்டுக்கல்மாவட்டம்விராலிப்பட்டிபிரிவிலிருந்து2 கிலோமீட்டர்தூரத்தில்அமைந்துள்ளது"ஒடுக்கம்தவசி மேடைமாகாலிங்கேஸ்வரர்" ஆலயம்.
இந்தநட்சத்திரதலத்தில்மகத்தில்பிறந்தால் ஜெகத்தைஆளலாம்'என்றபழமொழிக்குஏற்பமகான்பரத்வாஜைகுருவாககொண்டுமகம்நட்சத்திரநாள்மமற்றும்பஞ்சமிதிதி,சஷ்டிதிதி,ஏகாதசிதிதி,துவாதசிதிதி,பிரதோஷம்,மகாசிவராத்திரிஆகியதினத்தில்இத்தலத்தில்அபிசேகஆராதனைசெய்துவழிபட்டுவந்தால்வாழ்விலஉயர்ந்தநிலையைஅடையலாம்.
Tuesday, 7 May 2013
செல்வந்தர்களாக,,,,!திகழும்,,,!!ஆயில்ய நட்சத்திரகாரர்களே,,,,,,!!
வான்மண்டலத்தில் நாம் பார்க்க இருப்பது ஆயில்யம் நட்சத்திரம். இந்த நட்சத்திரமானது சந்திர கிரகத்தின் ஆதிக்கமும் குணமும் கொண்ட நட்சத்திரமாகும்,இந்த நட்சத்திரம்,இயற்கைலேயே மருத்துவ குணம் கொண்ட நட்சத்திரமாகும்.
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்,பெரியவர்களிடத்தில்மதிப்பும் மரியாதையும்,கொண்டவர்களாகவும்,செல்வந்தர்களாகவும்,இருப்பார்கள் நியாய தர்மங்கள் மற்றவர்களுக்கு போதிக்கும் குணம் நிறைந்திருக்கும் பணம் சம்பாதிக்கும் ஆர்வமும்,அதேபோல் செலவு செய்வதில் கெட்டிக்காரர்களாக திகழ்வார்கள் இவர்களுக்கு இயற்கைலேயே மருத்தவகுனம் நிறைந்திருக்கும் இந்த நட்சத்திரக்காரர்கள் தெய்வபக்தி நிறைந்திருந்தால் எதையும் சாதிக்கும் வல்லமையமையும் இந்த நட்சத்திர தலத்தில் சந்திரன் யோகா சந்திரனாக அருள் பாலிக்கிறார்
இச்சிறப்பு பெற்ற ஸ்தலம் தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டம் திருதேவன்குடி [நண்டு கோவில்] 'கற்கடஸ்வரராக"அமைந்துள்ள இக்கோவில் கும்பகோணத்திலிருந்து 11 வது கிலோமீட்டரில் சூரியனார் கோவில் செல்லும் வழியில் திரு வி ச நல்லூர் அங்கிருந்து பிரிவு ரோட்டில் 2 கிலோமீட்டர் சென்றால் திருதேவன்குடி இந்த ஸ்தலம் தான் ஆயில்யம் நட்சத்திரகாரர்களின் உகந்த ஸ்தலமாகும்.
இந்த ஸ்தலத்தில் ஆயில்ய நட்சத்திரகாரர்கள், ஆயில்யம் நட்சத்திர நாள்,மற்றும் தேய்பிறை நாளில் இதல இறைவனுக்கு நல்லெண்ணெய் சாத்தி வழிபட்டால் வாழ்வில் வளமும் மேன்மையும் அடையலாம் அம்மாவசை,மற்றும் சனிக்கிழமைகளில் இத்தலத்திலுள்ள அருமருந்து நாயகியை வழிபட்டு மருந்து சாப்பிட்டால் நோய் உடனே நிவாரனமாகும்.
Subscribe to:
Posts (Atom)



