Tuesday, 7 May 2013

செல்வந்தர்களாக,,,,!திகழும்,,,!!ஆயில்ய நட்சத்திரகாரர்களே,,,,,,!!

        வான்மண்டலத்தில் நாம் பார்க்க இருப்பது ஆயில்யம் நட்சத்திரம். இந்த நட்சத்திரமானது சந்திர கிரகத்தின் ஆதிக்கமும் குணமும் கொண்ட நட்சத்திரமாகும்,இந்த நட்சத்திரம்,இயற்கைலேயே மருத்துவ குணம் கொண்ட நட்சத்திரமாகும்.
     

       இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்,பெரியவர்களிடத்தில்மதிப்பும் மரியாதையும்,கொண்டவர்களாகவும்,செல்வந்தர்களாகவும்,இருப்பார்கள் நியாய தர்மங்கள் மற்றவர்களுக்கு போதிக்கும் குணம் நிறைந்திருக்கும் பணம் சம்பாதிக்கும் ஆர்வமும்,அதேபோல் செலவு செய்வதில் கெட்டிக்காரர்களாக திகழ்வார்கள் இவர்களுக்கு இயற்கைலேயே மருத்தவகுனம் நிறைந்திருக்கும் இந்த நட்சத்திரக்காரர்கள் தெய்வபக்தி நிறைந்திருந்தால் எதையும் சாதிக்கும் வல்லமையமையும் இந்த நட்சத்திர தலத்தில் சந்திரன் யோகா சந்திரனாக அருள் பாலிக்கிறார்
        இச்சிறப்பு பெற்ற ஸ்தலம் தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டம் திருதேவன்குடி [நண்டு கோவில்] 'கற்கடஸ்வரராக"அமைந்துள்ள இக்கோவில் கும்பகோணத்திலிருந்து 11 வது கிலோமீட்டரில் சூரியனார் கோவில் செல்லும் வழியில் திரு வி ச நல்லூர் அங்கிருந்து பிரிவு ரோட்டில் 2 கிலோமீட்டர் சென்றால் திருதேவன்குடி இந்த ஸ்தலம் தான் ஆயில்யம் நட்சத்திரகாரர்களின் உகந்த ஸ்தலமாகும்.
      இந்த ஸ்தலத்தில் ஆயில்ய நட்சத்திரகாரர்கள்,  ஆயில்யம் நட்சத்திர நாள்,மற்றும் தேய்பிறை நாளில் இதல இறைவனுக்கு நல்லெண்ணெய் சாத்தி வழிபட்டால் வாழ்வில் வளமும் மேன்மையும் அடையலாம் அம்மாவசை,மற்றும் சனிக்கிழமைகளில் இத்தலத்திலுள்ள அருமருந்து நாயகியை வழிபட்டு மருந்து சாப்பிட்டால் நோய் உடனே நிவாரனமாகும்.      

       

No comments:

Post a Comment