Tuesday, 28 May 2013

கருணைஉள்ளம்கொண்ட"உத்திரம்' நட்சத்திரகாரர்களே,,,,,,!!!

       வான்மண்டலத்தில்நாம் பார்க்க இருப்பது உத்திரம் நட்சத்திரம் இந்த நட்சத்திரமானதுசூரியன் மற்றும் புதன் கிரகத்தின் ஆதிக்கம் கொண்டு செயல்படும் நட்சத்திரமாகும் இந்த நட்சத்திரமானது இயற்கையிலேயே நன்னடத்தை கொண்டநட்சத்திரவளிமண்டலமாகும்.

          உத்திர நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கருணை உள்ளம் நிறைந்தவர்கள், எதையும் பொறுமையுடன் எதையும் சாதிப்பார்கள், நான்னடத்தை கொண்டவராகவும், பலராலும் விரும்பி நேசிக்கபடுபவர்கள், சொந்த சம்பாத்தியத்தில் சுகபோக வாழ்க்கை அனுபவிப்பபீர்கள்,வாக்கு நாணயம் தவறாத குணம் கொண்டவராகவும் தெய்வபக்தி கொண்டவராகவும் இருப்பார்கள்.காரணம் இந்த நட்சத்திரத்தில் மாங்கல்ய மகரிஷி அவதரித்தார் அகத்தியர்,வசிஷ்டர்,பைரவர் ஆகிய மகரிசிகளின் திருமணத்தில் மாங்கல்ய தாரண பூஜை  நிகழ்த்தியவர்.
          

       இவ்வளவு சிறப்புபெற்ற இந்த ஸ்தலம் தமிழகத்திலுள்ள தஞ்சாவூர்மாவட்டம் லால்குடி அருகிலுள்ள இடையாற்றுமங்களம் என்ற ஊரில்"மாங்கல்யேஸ்வரர்"   ஆலயம் அமைந்துள்ளது. திருச்சி லால்குடிலிருந்து 5 கி /மி தூரத்தில் இடையாற்றுமங்களம் உள்ளது..இக்கோவில் செல்ல பஸ் வசதி உள்ளது.
           

      உத்திர நட்சத்திரகாரர்கள் திருமண தடைகள் உள்ளவர்கள் தங்கள் நட்சத்திர தினத்தில் சென்று வழிபட்டால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்.மேலும்   முப்பிறவியில் செய்த கர்மவினைகள் நீங்கி வாழ்வில் வளம்பெறலாம்.

        

No comments:

Post a Comment