திடமான மனமும் உடல்வலிமையையும் கொண்ட"பூரட்டாதி"நட்சத்திரகாரர்களே,,,,,,,!!!
வான்மண்டலத்தில் பூரட்டாதி நட்சத்திரமானது சனி மற்றும் வியாழன் கிரகத்தின் ஆதிக்கம் கொண்ட நட்சத்திரமாகும் இந்த நட்சத்திரமானது இயற்கையாகவே திடமான மனமும் உடல் வலிமையையும் கொண்ட நட்சத்திரமாகும்.
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவராதலால், பணம் சம்பாதிப்பதில் வெற்றி காண்பார்கள் அதிகமாகப் பேசக்கூடியவர்கள், நன்கு படித்தவர் தேர்ச்சிபெற்றவர். நண்பர்களுடன் நல்ல உறவுகள் இருந்து வரும். தெளிவாகப் பேசுவர்கள். இவர்கள் வாழ்க்கைத் துணை, பெரும்பாலும் ஒரு பணக்காரக் குடும்பத்திலிருந்து வந்தவராக இருப்பார். , வெகு எளிதில், எதிர்பாலைச் சேர்ந்தவர்களால் ஈக்கப்படுகிறீர்கள். குழந்தைகள் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தருவார்கள். உங்களுக்கு, நல்ல, உடல்கட்டு இருக்கும்.காரணம் "காலபைரவர்'' பூரட்டாதி நட்சத்திர நாளில் ஏழு கிழமைகளை படைத்தார்.
இச்சிறப்பு பெற்ற ஸ்தலம் தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே உள்ள ரங்கநாதபுரம் (இவ்வூர் திருவையாதிளிருந்து 1 7 கிலோமீட்டர் திருக்காட்டுப்பள்ளி அங்கிருந்து அகரபேட்டைசெல்லும் வழியில் 2 கிலோமீட்டர்தூரத்தில் ரங்கநாதபுரம் உள்ளது இங்குதான் சிவன் "திருவனேஸ்வரராக'அருள்பாலிக்கிறார்.
இந்த நட்சத்திரதலத்தில் பூரட்டாதி நட்சத்திர நாளன்று இத்தலத்தில் அபிசேக ஆராதனைசெய்து வழிபட்டு வந்தால் குழந்தைபாக்கியம் இல்லாதவர்கள்குழந்தைபேறு பெறலாம் இங்குஏழைகளுக்கு ஏழுவகையான வண்ண ஆடைகளை தானம்செய்தால் ஏழேழு ஜென்ம பாவங்கள் தங்கள் தலைமுறையை தொடராமல் விலகும் என்பது நன்பிக்கை.
No comments:
Post a Comment