Monday, 5 August 2013

விசாலமானசிந்தனையுடன்செயல்படும் "சதயம்" நட்சத்திரகாரர்களே,,,,,,!!!

  வான்மண்டலத்தில் சதயம் நட்சத்திரமானது சனி கிரகத்தின் ஆதிக்கம் கொண்ட நட்சத்திரமாகும் இந்த நட்சத்திரமானது இயற்கையாகவே விசாலமான சிந்தனையுடன் செயல்படும் வல்லமையமையும் வசீகரமான தோற்றமும் கொண்ட நட்சத்திரமாகும்.


       இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்  தர்மசிந்தை உடையவராகவும், செல்வவளமும், தாராள மனமும், சுயேச்சையான கருத்தும், புத்திசாலித்தனமும், அறிவாற்றலும் நிறைந்தவராகவும் விளங்குவர்கள்.  பகைவர்களை ஒடுக்கி வெற்றி காண்பர்கள்.  பலரும், மதித்து மரியாதை காட்டுவார்கள்  நல்ல அந்தஸ்தும் அதிகாரமும் இருக்கும். நீங்கள் எதையும் ஒளிவு மறைவின்றி வெளிப்படையாகச் சொல்லிவிடக் கூடியவர் ஆனால் உண்மை பேசுபவர்/   காரணம் இத்தலத்தில் திருநாவுக்கரசருக்கு  சித்திரை "சதயம்"  நட்சத்திரநாளில் இறைவன் முக்தி கொடுத்தரர் 


     இச்சிறப்பு பெற்ற ஸ்தலம் திருவாரூர் மாவட்டம் திருப்புகலூர் (இவ்வூர் நன்னிலத்திளிருந்து நாகப்பட்டினம் செல்லும் வழியில் 1௦ கிலோமீட்டர்தூரத்தில்  திருப்புகலூர் உள்ளது இங்குதான் சிவன் அக்னிபுரீஸ்வரராகஅருள்பாலிக்கிறார்.


     இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சனிக்கிழமைகளில் வரும் சதயம் நட்சத்திர நாளில் இத்தல இறைவனை வழிபாடு செய்தால் ஆயுள்விர்த்தி ஆரோக்கியம் நற்பண்புகள் உண்டாகும். 


No comments:

Post a Comment