வான்மண்டலத்தில் உத்திரட்டாதி நட்சத்திரமானது வியாழன் கிரகத்தின் ஆதிக்கம் கொண்ட நட்சத்திரமாகும் இந்த நட்சத்திரமானது இயற்கையாகவே தாராள சிந்தையுடையவராக கொண்ட நட்சத்திரமாகும்
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவராதலால், ஒரு சிறந்த மேடைப் பேச்சாளராகவும், மகிழ்ச்சி நிறைந்தவராகவும், நற்குணமும், எதிரிகளை ஒடுக்கி வெற்றி கொள்ளும் திறனும் மிக்கவராகவும் விளங்குவார்கள். , தாராள சிந்தையுடையவராகவும், செல்வவளமும், அறிவாற்றலும் நிறைந்தவராகவும் இருப்பர்கள். உங்களுக்கு கவர்ச்சிகரமான, வசீகர உடற்கட்டு இருக்கும். உங்களுக்கு குழந்தைகளும் பேரக் குழந்தைகளும் இருப்பார்கள். உங்கள் வாழ்க்கையில், 27, 31 ஆம் வயதில்தான், நல்ல அதிருஷ்டசாலியாக விளங்குவீர்கள்காரணம் தேவசிற்பி விஸ்வகர்மா ,அகிர்புதன் ,ஆங்கிரசர்,அக்னி புரந்தக மகரிசிகள் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்.
இச்சிறப்பு பெற்ற ஸ்தலம் புதுக்கோட்டை மாவட்டம் தீயத்தூர் (இவ்வூர் புதுக்கோட்டைளிருந்து நாற்பது கிலோமீட்டர் உள்ள அங்கிருந்துஆவுடையார் கோவில் சென்று திருபுவன வாசல் செல்லும் வழியில் 21 கிலோமீட்டர்தூரத்தில் தீயத்தூர் உள்ளது இங்குதான் சிவன் "சகஸ்ரலக்ஷ்மீஸ்வரராக'அருள்பாலிக்கிறார்.
இந்த நட்சத்திரதலத்தில் உத்திரட்டாதி நட்சத்திர நாளன்று இத்தலத்தில் அபிசேக ஆராதனைசெய்து வழிபட்டு ஹோமம் செய்து சக்கரை பொங்கல் நெய் வேதியம் செய்து வழிபட்டால் பணகஷ்டம் தீரும் தடைபட்ட காரியம் நடக்கும் என்பது நன்பிக்கை.

No comments:
Post a Comment