Monday, 30 September 2013

மிதுனலக்கணம்,,,,,,,!!!

 மிதுனலக்கணத்தில் ஜென்மம் எடுத்த நீங்கள்  சிவந்த மேனி அழகுடன் இருப்பிர்கள். பொதுஅறிவு மிகுந்தவர் .மேல்அதிகாரிகளிடமும் ,

அரசாங்கத்திடமும் விரோதத்தை சம்பாதிக்காமல் இருப்பது நல்லது.மற்றவரை கவரும் இயல்பும்,பேச்சு திறனும் நிறைந்தவர்.   

சங்கீததநாட்டியத்திலும் ஆர்வமுள்ளவர்.நீங்கள்விரும்பும் எல்லா உணவுப் பண்டங்களும் உங்களுக்குக் கிடைக்கும் ,நீரில் 

கண்டம் உண்டாகலாம் .நேர்மை நிரந்தவராதலால்பிறரின் அன்பையும் ,ஆதரவையும் சுலபமாகப் பெறுவீர்கள் மரசம்பந்தமான வியாபாரங்களில் 

ஈடுபட வாய்ப்பு உண்டு .

   சிம்மராசி உங்கள் முன்றாம் வீடாக அமைந்திருப்பதால் அஞசாநெஞ்சம்முடையவராக இருப்பீர்கள் .எனினும் திய நட்ப்புகளைத்தவிர்ப்பது 

நலம் நீங்கள்விரும்பும் எல்லாம் பொருள்களும் ,உரிய நேரத்தில் கிடைக்கும் .மற்றவரை சொல்லாலும் ,செயலாலும் புண்படுத்தும் இயல்புண்டு

   ஏழாம்வீடு தனுசு ராசியாக அமையப் பெற்றதால் ,மற்றவரின் குறைகள் மிகைபடுத்துவராகவும்  கலக புத்தி உடையவரும் ,கர்வமும் 

 உடையவருமான வாழ்க்கைத்துணைவரை அடைந்து ,அவரால் உண்டாகும்இன்னல்களை தவிர்க்கப் போராடும் சூழ்நிலைகள் உங்களுக்குஉண்டாகும்.

    மகரராசிஉங்கள்எட்டம் வீடாக இருப்பதால்   சிறந்த அறிவாளியாகவும் ,புகழ் உடையவராகவும் நன் நடத்தையுள்ளவராகவும் திகழ்விர்கள்   .

விடாமுயற்சியும்,துணிவும்,பரந்த மனப்பான்மையும் உடையவராக இருப்பீர்கள்.இலக்கியத் துறையில்ஈடுபடும்,ஆழ்ந்த அறிவும் உண்டாகும்.

விலைஉயர்ந்த கலைபொருளை  சேகரிக்க,பணம் செலவு செய்யும் குணம் முதலியவற்றை தனக்காகவும்,தற்பெருமைக்காகவும்,பணம் விரயம் செய்யும் 

மனபாங்கு முதலியவை உங்களுடைய குணங்களாகும்.

  உங்கள் லக்கினமானது அதனுடைய இடத்தில்2 ;வது திரிகோணத்தில் அமைந்திருப்பதால்,தங்களுடைய தொழிலிக்கும், இதர எவ்வித முயற்சிகளும்,

அரசுத்துறைகளில் சேவை செய்தால்  என்பது சாதகமாக இருக்காது.தங்கள் முதுமை  பருவத்திற்காக சேமிக்கவேண்டும் என்பதை மறந்து விடலாம் 

சிறந்த நுன்னரிவுடயவராக இருந்தபோதிலும்,தாங்கள் பெரும் செல்வ இழப்பை அடைவீர்கள்.தங்களால் நன்மை அடைவர்களைப் பற்றி தாங்கள்

 எப்பொதும்  விழிப்புடன் இருக்கவேண்டும் வாழ்கையில் முக்கியமான வருடங்கள் 19,23,25,29,32,36,43,46,49, இதை சந்தர்பத்தை சரியாக 

பயன்படித்தி கொள்ளுங்கள் 

      

No comments:

Post a Comment