Thursday, 11 April 2013

நட்சத்திர ஜன்னலில்,,,,,வானம் ,,,எட்டிபாக்குது,,,,,!!

  குழந்தை பிறந்த உடனே ஆணா,பெண்ணா,இதைத்தான்பாக்கிறோம்!இதைபார்த்துவிட்டு உடனே பிறந்த நேரத்தை எடுத்துகொண்டு ஒரு நல்ல ஜோசியரை பார்த்து  குழந்தைக்கு என்ன ராசி,என்ன நட்சத்திரம் என்றுதான் கேக்கிறோம்!
அந்த அளவுக்கு ராசி நட்சத்திரம் முக்கிய பங்கு வகுக்கிறது, அனைவராலும் நம்பக்கூடிய விஷயம்தான் ஏற்றுகொள்ள கூடிய விஷயம்தான். ஏற்று கொள்ளப்பட்ட விஷயம் தான் ஆனால் அதை முழுமையா தெரிந்து கொண்டால் இன்னும் நம்மவாழ்க்கைசெம்மையகிவிடும்அல்லவாதெரிந்துகொள்ளுங்கள்.


  

         சூரியனுக்கும்,நட்சத்திரங்களுக்கும் மட்டுமே இயற்கையான ஒளி உண்டு கிரகங்களே சூரியனிடமிருந்து தான் ஒளியை பெற்று பிரதிபளிக்கிறது அவற்றிற்கு இயற்கை ஒளிகிடையாது.
எனவே கிரகங்களைவிட நட்சத்திரங்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளது.இந்தநட்சத்திரம் ஆனது மனித வாழ்வில் பல மாற்றங்களை ஏற்படுத்துகின்றது வானில் எத்தனையோ நட்சத்திரங்கள் அத்தனைக்கும் துருவ நட்சத்திரமாக விளங்குவது,   அஸ்வினி ,.பரணி, கார்த்திகை,ரோகினி,மிருகசீரிஷம்,திருவாதிரை,புனர்பூசம்,பூசம்ஆயில்யம்,மகம்,பூரம்,உத்திரம்,ஹஸ்தம்,சித்திரை,ஸ்வாதி,விசாகம்,அனுஷம்,கேட்டை,மூலம்,பூராடம்,உத்திராடம்,திருவோணம்,அவிட்டம்,சதயம்,பூரட்டாதி,உத்திரட்டாதி,ரேவதி,போன்ற இந்த இருபத்தி ஏழு நட்சத்திரங்கள்தான் மிகமுக்கியமானதாக கருதப்படுகிறது,  
   எந்த ராசியில் பிறந்தாலும் எந்தநட்சத்திரத்தில் பிறந்தாலும் மனிதனுக்கு ஏற்ற தாழ்வு இருந்துகொண்டேதான்இருக்கிறதுஇந்தசூழ்நிலையில் வாழ்கையில் முன்னேறவும், நிம்மதி பெறவும்,  இறைவனை நாடித்தான்செல்கிறோம் இதற்காகத்தான் நம் முன்னோர்கள் கோவில் குளங்களை அமைத்துள்ளார்கள்.
    இக் கோவில்களுக்கு சென்று வருவதின் மூலம் நம் குறைகள் நீங்கி"நல்ல பலன்" கிடைக்கும் என்ற நம்பிக்கைள் சென்றுகொண்டு இருக்கிறோம்.   

அதனால் தான் மக்களை அதிகம் அலையவிட கூடாது என்பதிற்காக ஒவ்வொரு நட்சத்திரகாரருக்கும் ஒரு கோவிலை அமைத்துள்ளார்கள் அதை பற்றி நாம் அடுத்த பதிவில் பார்ப்போம்.     


No comments:

Post a Comment