Tuesday, 30 April 2013

நன்றி யுணர்வுள்ள,,,,,,,!புனர்பூசம் நட்சத்திரகாரர்களே,,,,,,,,,!!

   வான்மண்டலத்தில் புனர்பூசம் நட்சத்திரமானது புதன் கிரகத்தின் ஆதிக்கமும் சந்திர கிரகத்தின் குணமும் கொண்ட ஒரு நட்சத்திரமாகும் இந்த நட்சத்திரமானது இயற்கையாகவே நல்ல ஊக்கதிறன் கொண்ட நட்சத்திரமாகும்.

   

      புனர்பூசம்நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எப்போதும் நன்றி உணர்வுடன் நடந்துகொள்வர்  தனக்கு உதவிசெய்தவரை போற்றி புகழும்குணம் இவர்களிடம் நிறைந்திருக்கும் மனதில் உள்ளதை வெளிப்படையாக சொல்ல விரும்பமாட்டார்கள் கல்வியில்நல்ல மேன்மை கொண்டவராகவும் பேச்சு திறன் இவர்களிடம்இயற்கையாகவே  இருக்கும் ஏன் எனில் இராமபிரான் பிறந்த நட்சத்திரம் அதுமட்டுமல்ல காஷ்யப முனிவரின் மனைவிஆதிதி இன் நட்சத்திரதலத்தில்  மாதந்தோறும் விரதமிருந்து தேவர்களை பெற்றெடுத்தார்களாம்,

 

    இச்சிறப்புப் பெற்ற இந்த ஸ்தலம் தமிழகத்திலுள்ள வேலூர் மாவட்டம் வானியம்பாடி அருகிலுள்ள பழைய வானியம்பாடியில் 'அதிதீஸ்வரர்" ஆலயம் அமைந்துள்ளது.இத்தலத்தில்வாணியும் பிரம்மாவும் தங்கினார்கள் இதனால் சிவனும் பார்வதியும் மகிழ்ந்து வாணிக்கு அருள் செய்து வாணியை பாடும்படிகூறினார்கள்  வாணியும் பேசும் சக்தியை பெற்று இனிய குரலில் பாடினர்.இதன் காரனத்தினாலேயே இவ்வூர் வானியம்பாடி ஆனது. 

    

        புனர்பூசம்நட்சத்திரகரர்கள்  மேற்கு நோக்கிய இக்கோவிலை வழிபட்டால் ஆயிரம் கிழக்கு நோக்கிய கோவிலை வழிபட்டபலன் கிடக்கும் என்பது ஐதீகம் இத்தலத்தில் தட்சினாமூர்த்தி சின்முத்திரையுடன்  அமர்ந்து அருள் பாலிக்கிறார் இத்தளத்தில் வழிபட்டால் தானியவிருத்தி,குழந்தைகளுக்கு கல்வி விருத்தியாகும்இத்தலத்தில்ஏழைகளுக்கு அன்னதானம் செய்தால் வியாபாரம் விருத்தியாகும்.   

No comments:

Post a Comment